இடுகைகள்

next post

திருவண்ணாமலையில் இடைக்காடர் சமாதி

  அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இனிய வணக்கங்கள். சித்தர்கள் வாழும் திருவண்ணாமலை  திருவண்ணாமலையில் இடைக்காடர் சமாதி எங்கு உள்ளது? திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்துக்கு செல்பவர்கள் அண்ணாமலையாரின் அருளைப் பெறுவது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியமானது இடைக்காடர் சித்தரின் அருளையும் சேர்த்து பெறுவதாகும். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்துக்கு செல்பவர்கள் அண்ணாமலையாரின் அருளைப் பெறுவது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியமானது இடைக்காடர் சித்தரின் அருளையும் சேர்த்து பெறுவதாகும். மூன்றாம் நூற்றாண்டில் அவதரித்ததாக கணிக்கப்பட்டுள்ள இடைக்காடர் சித்தர் சுமார் 600 ஆண்டுகள் வாழ்ந்ததாக சுவடிகளில் குறிப்புகள் உள்ளன. திருவண்ணாமலை ஆலயத்தில் அருள் அலைகள் நிரம்பி இருப்பதற்கு அங்கு அவரது ஜீவ சமாதி அமைந்திருப்பது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இன்றும் திருவண்ணாமலையில் இடைக்காடர் சித்தர் அருள்புரிந்து வருகிறார். பொதுவாக பழமையான சிவாலயங்களில் சித்தர்கள் எந்த இடத்தில் அடங்கி இருக்கிறார்கள் என்பது தெரியாது. கருவறையில் சித்தர்கள் அடங்கி இருப்பார்கள் என்று பொதுவாக கூறப்பட்டாலும...

அரச மரத்தைப் பற்றி ஒரு ஸ்லோகம் உண்டே தெரியுமா? - ஸ்ரீ மகாபெரியவா ...

படம்
  அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இனிய வணக்கங்கள். அரச மரத்தைப் பற்றி ஒரு ஸ்லோகம் உண்டே தெரியுமா?   ஸ்ரீ மகாபெரியவா . அது 1965. சென்னைக்கு பாதயாத்திரை செய்த காஞ்சி மகாபெரியவர், வழியில் சுங்குவார்சத்திரத்தில் தங்கினார். அவரைப் பார்க்க சென்னை அன்பர்கள் பலர் இருந்தனர். அவர்களில் ஹிந்தி தெரிந்த அன்பர் ஒருவரை அழைத்தார் மகாபெரியவர். ராமேஸ்வரத்தில் உள்ள காமகோடி பீட மடத்துக்கு வரும் வடநாட்டு யாத்ரீகர்கள் பாராயணம் செய்ய, துளஸிதாசரின் 'அனுமன் சாலீஸா'வை அச்சடித்துக் கொடுக்க விரும்புவதாகத் தெரிவித்து, அதற்காக உதவும்படி அந்த அன்பரிடம் கூறினார். அந்த அன்பரும் அனுமன் சாலீஸாவைப் படித்துக் காட்டினார். அப்போது, மடத்தின் சிப்பந்தி ஒருவர் ''ராமேஸ்வரத்தில் உள்ள அனுமன்தான் 1964 டிசம்பரில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இருந்து ஜோதிர்லிங்கங்களைக் காப்பாற்றினார்'' என்றார். அப்போது அந்த அன்பர் மகாபெரியவரிடம் ஒரு கேள்வியை முன்வைத்தார். ''பெரியவா... ரொம்ப நாளாவே ஒரு சந்தேகம். நான் வடக்கே சோம்நாத், ஓம்காரேஸ்வர், மகாகாளேஸ்வர்ன்னு ஜோதிர்லிங்க தரிசனத்துக்குப் போயிருக்கேன். அங்கெல்லாம், ஜோதி...

துளசிதாசர் காசியில் சந்தனம் கேட்ட ராம, லட்சுமணன்

படம்
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இனிய வணக்கங்கள். ஒரு சமயம் துளசிதாசர் காசியில், கங்கையில் நீராடி விட்டு விஸ்வநாதரை தரிசித்தார்.  விஸ்வநாதர் கருணை காட்டுவார் என்று காத்திருந்தார். ஓயாமல் ராமநாம ஜெபம் செய்தார். இரவில் அசுவமேத கட்டத்தின் படிக் கட்டில் உட்கார்ந்து ராமாயணம் கதாகா லட்சேபம் சொல்வார். ஒவ்வொரு நாளும் அவர் படகில் ஏறி அக்கரைக்கு சென்று கங்கையில் நீர் எடுத்துக் கொண்டு வெகுதூரம் சென்று ஒரு காட்டில் காலைக் கடன்களை கழிப்பார். பின் உடம்பை சுத்தம் செய்து கொண்டு மீதியுள்ள தண்ணீரை ஒரு ஆலமரத்தில் கொட்டி விடுவார். அந்த ஆலமரத்தில் துர்மரணம் அடைந்த ஆவி ஒன்று வசித்து வந்தது. அது அந்த நீரை குடித்ததும் தாகம் அடங்கி ஒருவாறு அமைதி கிடைத்தது. இதன் பயனாக விவேகம் வந்தது. இவர் ஒரு பெரிய மகான் என்று தெரிந்து கொண்டது. அந்த ஆவி ஒரு நாள் துளசிதாசர் திரும்பிப் போகும் வழியில் மறைத்து நின்றது. துளசிதாசரின் நடை தடைப் பட்டது. உரக்க ராமா, ராமா என்று சத்தமிட்டு கூவினார். அப்போது அந்த ஆவி கூறியது, பெரியவரே, பயப்பட வேண்டாம். நான் ஒரு பாவியின் ஆவி. நீங்கள் வார்த்த நீரைக் குடித்து புனிதமானேன். உங்களுக்கு ஏதாவது உ...

கோயில் சிவாலயங்கள்

படம்
அனைத்து பாவங்களைப் போக்கும் 54 சிவாலயங்கள் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இனிய வணக்கங்கள். என்ன பதிவு அளிக்கலாம் என்று தேடிய பொழுது, நம் தேடல் பசங்கள் பக்கம் 54 வசி தாங்கள் என்று தொடங்கியது. இந்தப் பதி வில் என்னென்ன பசங்கள்...எந்தெந்த சிவத்தலங்களில் நீங்கும் என்று குறிப்புகள் மட்டும் தருகின்றோம். அங்குள்ள பிரசித்தி பெற்ற வசி தாங்கள் நீங்கள் தான் திடப் கண்டு தரிசிக்க வேண்டும். 1. திருக்குடந்தை                 - ஊழ்வினை பாவம் அகல 2. திருச்சிராப்பள்ளி             - வினை அகல 3. திருநள்ளாறு                    - கஷ்டங்கள் அகல 4. திருவிடைமருதூர்            - மனநோய் விலக 5. திருவாவடுதுறை              - ஞானம் பெற 6. திருவாஞ்சியம்                 - தீரா துயர் நீங்க 7. திருமறைக்காடு               - கல்வி மேன்மை உண்டாக 8. திருத்தில்லை  ...